அரவுசிறு பிறைஇதழி தரிபதகை பொதிசடிலர்
பாலா வேலாதேர்
அருணவெயில் இரவிசுழல் இமகிரியில் அரிவைபெறு
வாழ்வாய் வாழ்வோனே
குரவருள மகிழஉயர் குருவடிவு தருபெருமை
கோடாய் தாடாளா
குமரகுரு
பரமுருக குதலைமொழி தெரியவுரை
கூறாய் மாறாதே
இரவலரும்
முனிவர்களும் இமையவரும் உனதடிமை
ஆமே ஆமேநீ
எமைமுனியில் ஒருதுணையும் இலையடிமை யடிமை
வீழ்வார் சூழ்வார்பார் (யென)
பரசமய குலகலக
சிவசமய குலதிலக
தாலோ தாலேலோ
பணிலம்
உமிழ் மணியையலை யெறியுநகர்வரு கடவுள்
தாலோ தாலேலோ.
|