அர

        அரிபிரமர் சந்த தம்பு கழ்ந்திடு
            பரசுடைய நம்பர் பங்கின் மென்கொடி
            அகிலலோகமும் ஆதரத் தாற்ப டைத்தவள்
        அரிவைமட மங்டகை மென்க னங்குழை
            திரிபுரை அணங்கு கங்கை அம்பிகை
            அகளமாய்அனு பூதியிற் பூத்த பொற்கொடி
        அபினவை முகுந்தர் தங்கை சுந்தரி
            உரகபண பந்தி கொண்ட கங்கணி
            அமுதமூறிய பாடலுக் கேற்ற சொற்குயில்
        அறுசமய முங்க லந்து நின்றவள்
            மறலிபர வும்ப்ர சண்ட சங்கரி
            அழகெலாமிது தானெனப் போற்று சித்திர

        முரிபுருவ வஞ்சி திங்கள் தங்கிய
            திருமுகம லர்ந்த பைங்க ருங்கிளி
            முதல்விபூரணி ஞானவித் தாய்க்கி ளைத்தவள்
        முருகுவிரி கொந்த ளம்பி றங்கிய
            மணிமவுலி மண்ட லங்கொள் செஞ்சடை
            முடிமனோன்மணி வாலைவற் றாக்கு ணக்கடல்
        முகிழ்முலை சுமந்து நொந்த சைந்திறும்

            இறுமென மருங்கி ரங்க இன்புறு

            முறுவலாடிய கோமளத் தாற்பெ ருத்தவள்
        முறைமுறை முழங்கு கின்ற கிண்கிணி
            பரிபுரம் அலம்பு செம்ப தம்புரை
            முளரிநாண்மலர் வாழ்வெனப் போற்றி நிற்குதும்

        உரியபதி னெண்க ணங்க ளஞ்சது
            மறைமுனிவ ரும்ப ரிந்து நின்கழல்
            உறுதிதானென நாவெடுத் தேத்தி நித்தலும்
        உளமிக மகிழ்ந்து செங்க ரங்களின்
            மலர்கொடு வணங்கி யஞ்சல் என்றெமை
            உடைமையாயருள் நீயெனக் காத்த நட்பனை
        உடுமுக டதிர்ந்து விண்த லங்களும்
            அரிய பகிரண்ட மும்பி ளந்திட
            உதறுதோகை மயூரனைத் தோற்ற முற்றெழும்
        உபநிடத மந்த்ர தந்த ரந்தனில்
            அசபையி லடங்கும் ஐம்பு லன்களில்
            உவகை கூரும னோகரக் கூத்த னைப்பொரு

        தரியலர் நெருங்க செங்க ளம்புகு
            நிசிரர் துணிந்த வெம்ப றந்தலை
            தழுவுபாடல் விசாகனைப் பாற்க டற்றரு
        தரளநகை செங்க ருங்கண் இந்திரை
            குறமகள் மணம்பு ணர்ந்த திண்யுய
            சயிலமோகன மார்பனைத் தோட்டி தழ்ப்பொதி
        தழைமுகை யுடைந்து விண்ட ரும்பிய
            புதுநறவு சிந்து பைங்க டம்பணி
            தருணசீதள வாகனைக் கோட்ட கத்துயர்
        சரவண மிலங்க வந்த கந்தனை
            முருகனை விளங்கு செந்தில் வந்திடு
            சமரமோகன வேலனைக் காத் தளிக்கவே.