பங்கயன் முதலோர் இந்திரன் இமையோர்
பாரோர் ஏனோர்பார்
பண்புடன் உனையே சிந்தையின் நினைவார்
பால்நீ மால்கூராய்
வெஙகட கரிசூ ழெண்திசை நிறைவார்
வீணாள் காணாதே
மின்பரி புரதாள் பொன்புரை முடிமேல்
வேய்வார் வீறாலே
செங்கனி மணிவாய் தங்கி நகைதா
தேவா சீறாதே
திண்திறல் முருகா தண்டமிழ் விரகா
சேரார் போரேறே
சங்கரி மருகா சங்கரி சிறுவா
தாலோ தாலேலோ
சந்ததம் இயல்தேர் செந்திலை உடையாய்
தாலோ தாலேலோ.
|