அண

        அண்டர் தந்துயரொழித் தனமென்று கொண்டாடி
ஆவலங் கொட்ட மன்னும்
அயிராணி கலவியமு துண்டனம் எனத்தேவர்
அரசிரு கரங்கள் கொட்டத்

துண்டவெண் பிறைபுரை எயிற்றுவெஞ் சூருளந்
துண்ணெனப் பறைகொட் டநீள்
சுருதியந் தணர்இடந் தொறுமங் கலப்பெருந்
தூரியங் கொட்ட முட்டப்

பண்டரு பெருங்கவிப் புலமைக்கு நீசொன்ன
படிதிண்டி மங்கொட டவெம்
பகைநிசா சரர்வளம் பதிமுழுது நெய்தலம்
பறைகொட்ட வெள்வ ளைதருந்

தண்தரள மலைமொண்டு கொட்டுநக ராதிபா
சாப்பாணி கொட்டி யருளே
சமரமுக ரணவீர பரசமய திமிராரி
சப்பாணி கொட்டி யருளே.