கார்கொண்ட பேரண்ட கூடமோ ரேழுநீ
கற்பிக்கு மந்த்ர சாலை
கற்பதா ருவுநின் புயத்தினுக் கணிமாலை
கட்டவளர் நந்தன வனஞ்
சீர்கொண்ட புருகூத னுந்தேவர் குழுவுநின்
திருநாம மறவா தபேர்
சிகரகன காசலமும் உனதுதிரு வாபரண
சேர்வைசேர் பேழை கடல்நீர்
போர்கொண்ட வேலின் புலால்கழுவு நீரேழு
பொழிலுமத் தனைதீ வுமோர்
பொலிவினுட னேநின் கலாபமயில் வையாளி
போய்மீளும் வீதியெனவே
தார்கொண்ட மணிமார்ப் செந்தில்வடி வேலனே
சப்பாணி கொட்டி யருளே
தரளமெறி கரையில்வளை தவழ்செந்தில் வேலவா
சப்பாணி கொட்டி யருளே.
|