கருதிய தமனிய மணியரை வடமிடு
கட்டுவ டத்தோடுங்
கழலிடு பரிபுரம் ஒலியெழ மணியுமிழ்
கைக்கட கப்பூணும்

இருசுட ரொளிபெற மருவிய தளர்நடை
யிட்டும திப்பாக
எழுமதி புரைதிரு முகமலர் குறுவெயர்
இட்டுவ ரத்தாமஞ்

சொருகிய நறுமலர் முகையவிழ் சிகையிடு
சுட்டிநு தற்றாழத்
தொழுதுளை வழிபடும் அடியவர் இளையவர்
சொற்படி தப்பமற்

குருமணி யலையெறி திருநக ரதிபதி
கொட்டுக சப்பாணி
குருபர சரவண பவசிவ மழவிடை
கொட்டுக சப்பாணி.