தொழுதுந் துதித்துந்
துயரற்றிச்
சுரருக் கிறையுஞ் சுரரு முடன்
சூழ்ந்த
கடம்பா டவியிலுறை
சொக்கக் கடவுள் தனைமூன்று
பொழுதும் பரவி எழுத்துச்சொற்
போலப் பொருளும் புகறியெனப்
புகலு மாறஞ் சிரட்டி திணைப்
பொருட்சூத் திரத்தின் பொருள்மயங்கா
தெழுதும்
பனுவற் பரணன் முதல்
ஏழேழ் பெருமைக் கவிப்புலவர்
இதயங் களிக்க விருப்பமுடன்
இறையோன் பொருட்குப் பொருள்விரித்து
முழுதும் பகர்ந்த கனிவாயான்
முருகா முத்தந் தருகவே
மொழியுஞ் சமயம் அனைத்தினுக்கு
முதல்வா முத்தந் தருகவே.
|