New Page 1

        வெண்மைச் சிறைப்புள் ஓதிமங்கள்
            விரைக்கே தகையின் மடலெடுத்து
        விரும்புங் குழவி யெனமடியின்
            மீதே இருத்திக் கோதாட்டித்

        திண்மைச் சுரிசுங் கினிற்குவளைத்
            தேறல் முகந்து பாலூட்டிச்
        செழுந்தாமரைநெட் டிதழ்விரித்துச்
            சேர்த்துத் துயிற்றித் தாலாட்டப்

        பெண்மைக் குருகுக் கொருசேவற்
            பெரிய குருகு தன்வாயிற்
        பெய்யும் இரையைக் கூரலகு
            பிளந்து பெட்பின் இனி தளிக்கும்

        வண்மைப் புதுமைத் திருச்செந்தூர்
            வடிவேல் முரகா வருகவே
        வளருங் களபக் குரும்பைமுலை
            வள்ளி கணவா வருகவே.