New Page 1

        பேரா தரிக்கும் அடியவர்தம்
            பிறப்பை ஒழித்தப் பெருவாழ்வும்
        பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
            பெருமா னென்னும் பேராளா

        சேரா நிருதர் குலகாலா
            சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்
        தேவா தேவர் சிறைமீட்ட
            செல்வா என்றுன் திருமுகத்தைப்

        பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
            பரவிப் புகழ்ந்து விருப்புடனப்
        பாவா வாவென் றுனைப்போற்றப்
            பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்

        வாரா திருக்க வழக்குண்டோ
            வடிவேல் முருகா வருகவே
        வளருங் களபக் குரும்பமுலை
            வள்ளி கணவா வருகவே.