வர

        வரியு நீள்சடி லத்திடை மகுட ராசித ரித்தவர்
            வளையு  நீடுக ருப்புவில் மதுர வாளிதொ டுத்தவர்
        அரிய பூரணை புட்கலை அரிவை மார்இரு பக்கமும்
            அழகு கூரும கிழ்ச்சியர் அடிவிடி டாமல்வ ழுத்துதும்
        உரிய நான்மறை நித்தலும் உறுதி யாகவ ழுத்திய
            உவமை யாசுக வித்துறை உதவு நாவலன் முற்றிய
        பரிய வாளைகு தித்தெழு பரவை சூழுந கர்க்கிறை
            பழநிவேலவ னைப்புகழ் பனுவல் மாலைத ழைக்கவே.