New Page 1

        வெறியார் இலைத்தொடைத் தக்கனழல் வேள்வியை
            வெகுண்டுபகல் பல்லுகுத்து
        வெள்ளிவிழி யைக்கொடுத் தயிரா வதப்பாகன்
            வேறுருக் கொடுபறக்கச்

        செறியா டகத்தகட் டிதழ்முளரி நான்முகன்
            சென்னியைத் திருகிவாணி
        செய்யதுண் டம்துண்டம் ஆக்கியத் தக்கன்
            சிரத்தையொரு வழிப்படுத்திப்

        பொறியார் அழற்கடவுள் கைத்தலம் அறுத்துவிண்
            புலவர்முப் பத்துமூவர்
        போனவழி ஒருவர்போ காமலுன் னுடலையும்
            புழுதியில் தேய்த்ததெல்லாம்.

        அறியாத தல்லநீ செந்தில்வடி வேலனுடன்
            அம்புலீ ஆடவாவே
        அரவின்முடி நெளியமயில் முதுகில்வரு குமரனுடன்
            அம்புலீ ஆடாவாவே.