கடியவளி எறியுங்
தழைச்சிறைக் கூருகிர்க்
கருடவா கனனும்இகல்கூர்
கட்டைமுள்
அரைநாள் நெட்டிதழ் உடுத்தபொற்
கமலயோ ளியுமெழுந்து
கொடியவெங்
கொலைபுரி வராகமென ஒருவனெழு
குவலயம் இடந்துதேடக்
குறித்தொருவன் எகினமாய் அண்டபகி ரண்டமுங்
கொழுதிக் குடைந்துதேட
முடியஇது
காறுமவர் அறிவுறா வகைநின்ற
முழுமுதற் கடவுள் அடியும்
முடியுநீ கண்டனை எனக்கருதி இன்றுதிரு
முகமலர்ந் துனை அழைத்தால்
அடியவரை
வாழ்வித்த செந்தில்வடி வேலனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
அம்புலீ ஆடவாவே.
|