பரியநிழல்
தன்னைச் சுளித்துவெயி லொடுபொருது
பாதசங் கிலியைநூறிப்
பாரிசா தத்தருவை இடுகுள கெனக்கவுட்
பகுவாய் புகக்குதட்டித்
தரியலர்
நகர்ப்புறத் தெயிலிடு கபாடந்
தனைத்தூள் படுத்தியவர்பொன்
தருணமணி முடியிடறி முறைமுறை அழைக்குந்
தழைசெவிப் பிறைமருப்புச்
சொரியுமத
தாரைக் குறுங்கட் பெருங்கொலைத்
துடியடிப் புரொருத்தல்
துங்கவேள் இவனுடைய முன்றிற் புறத்தில்
துளைக்கர நிமிர்த்துநிற்கும்
அரியகரு
நாகமென வெருவல்கொல் இவனுடன்
அம்புலீ ஆடவாவே
அருவரைகள் கிடுகிடென மயில்கடவு முருகனுடன்
ஆம்புலீ ஆடவாவே.
|