முருந்தாரு மணிமுறுவல்
நெய்தல்நில மகளிரிள
முகிழ்முலை தனக்குடைந்து
முளரிமுகை நீரிற் குளித்துநின் றொருதாளின்
முற்றிய தவம் புரியவெங்
கருந்தாரை
நெட்டிலைப் புகர்வே லெனப்பொருங்
கட்கடைக் குள்ளுடைந்து
காவிமலர் பங்கப் படக்கருங் குழல்கண்டு
கரியமுகில் உடல்வெளுத்துப்
பொருந்தாமல்
ஓடியந் தரசாரி யாயொரு
பொருப்பேற வளமையேறும்
புகழேற வாழுந் திருச்செந்தி லாயுனது
பொற்றாள் வணக்கமுற்றுத்
திருந்தார்கள்
நெஞ்சம் பெரும்பறை முழக்கநீ
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
|