முளைவாளை
வடிவேலை வடுவைவெங் கடுவையிதழ்
முளரியைப் பிணையை மதவேள்
மோகவா ளியையடு சகோரத்தை வென்றுகுழை
முட்டிமீ ளுங்கண்மடவார்
நினைவாளை
வாள்முறுவ லாடியிடிள முலையானை
நேர்நேர் நிறுத்திநெய்தல்
நீடுமன காடவி வனத்திற் பிணித்துவெண்
நித்தில வடந்தெரிந்து
சினைவாளை
பாயுந் திருச்செந்தில் வேலனே
சிறுபறை முழக்கியருளே
செருவிலெதிர் பொருதபர நிருதர்குல கலகனே
சிறுபறை முழக்கியருளே.
|