தௌவுங் கரட
மடையுடைக்குந்
தந்திப் பகடு பிடிபட்டுந்
தருவும் அமுதும் இருநிதியுந்
தனியே கொள்ளை போகாமல்
எவ்வம்
உறவிட் புலத்தமரர்
ஏக்கம் உறாமல் அயிராணி
இருமங் கலநாண் அழியாமல்
இமையோர் இறைஞ்சும் அரமகளிர்
பௌவம்
எறியுந் துயராழிப்
பழுவத் தழுந்தி முழுகாமல்
பரக்குஞ் சுத்தித் துறைவேள்வி
பழுதா காமல் பரவரிய
தெவ்வர்
புரத்தை அடுஞ்சிறுவா
சிறியேம் சிற்றில் சிதையேலே
திரைமுத்
தெறியுந் திருச்செந்தூர்ச்
செல்வா சிற்றில் சிதையேலே.
|