New Page 1

        வெள்ளப் பெருந்துளி இறைக்கும் பெருங்காற்று
            வெண்டிரையின் மூழ்கியேழு
        வெம்புரவி ஒற்றையா ழித்தடந் தேரேறி
            வேதபா ரகர்இறைஞ்சப்

        பள்ளக் கடல்நிரை கலக்கியூ ழியின்இருட்
            படலமுழு துந்துடைத்துப்
        படர்சுடர் விரித்துவரு பன்னிரு பதங்கர்பொற்
            பாதமலர் சென்னிவைப்பாம்

        உள்ளக் கறிப்பறா வரிவண்டு பண்பாட
            ஓதிம நடிக்கமுள்வாய்
        உட்குடக் கூன்வலம் புரிமுத்தம் உமிழநீர்
            ஓடையிற் குருகுகாணக்

        கள்ளக் கருங்கட் சிவந்தவாய் வெண்ணகைக்
            கடைசியர் நுளைச்சியருளங்
        களிகூரும் அலைவாய் உகந்தவே லனையெங்கள்
            கந்தனைக் காக்கவென்றே.