தண்டே
னுடைந்தொழுகு மருமாலை நீள்முடி
தரிக்குஞ் சதக்கிருதுசெந்
தருணமணி ஆசனத் தேறமா தலிசெழுந்
தமனியத் தேருருட்டப்
பண்டே
பழம்பகை நிசாசரர்கள் உட்கப்
பரப்புநிலை கெட்டதென்று
பரவுங்கு பேரன்வட பூதரம் பொருபுட்
பகத்தேர் உருட்டவீறு
கொண்டே
உதித்தசெங் கதிரா யிரக்கடவுள்
குண்டலந் திருவில்வீசக்
கோலப்ர பாமண் டலச்சுடர் துலக்கமுட்
கோலெடுத் தருண அருணன்
திண்டே
ருருட்டவளர் செந்தில்வாழ் கந்தனே
சிறுதேர் உருட்டி யருளே
சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
சிறுதேர் உருட்டி யருளே.
|