ஆதிநூல் மரபாகி அதனுறும் பொருள் ஆகி
அல்லவை யனைத்தும் ஆகி
அளவினுக் களவாகி அணுவினுக் கணுவாய்
அனைத்துயிரும் ஆகி அதனின்
சாதியின்
பிரிவாகி வெவ்வேறு சமயங்கள்
தானாகி நானா கிமெய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுச்ய
தன்னொளியி லீலை யாகி
ஓதிய
தனைத்தினும் அடங்காமல் வேறாகி
உள்ளும் புறம்பும் ஆகி
ஓளியிலொளி யாகிமற் றிரவுபக லற்றவிடம்
ஒப்புவித் தெனை யிருத்தித்
தீதினை
அகற்றிநின் திருவருள் புரிந்தவா
சிறுதேர் உருட்டி யருளே
சேவற்
பதாகைக் குமார கம்பீரனே
சிறதேர் உருட்டி யருளே.
|