எழுசீர் சந்த விருத்தம் 119. | எறிவே லிரண்டுமென துயிர்சோ ரவுண்டுலவ | | இகல்வா ளிரண்டு விசிறா | | வெறிசேர் கடம்பவன மதுரே சர்முன்குலவி | | விளையா டுமின்கொ டியனீர் | | சிறுநூன் மருங்குலிறு மிறுமா கொலென்றுசில | | சிலநூ புரஞ்சொன் முறையீ | | டறியீ மெனெஞ்சுமல மரவே சுழன்றிடுநும் | | |
கட்டளைக் கலித்துறை 120. | அறந்தந்த பொன்பொலி கூடற்பிரான்வெற்பி லம்பொற்படாம் | | நிறந்தந்த கும்ப மதயானையுநெடுந் தேர்ப்பரப்பும் | | மறந்தந்த விற்படை வாட்படையுங்கொண்டு மற்றொருநீ | | புறந்தந்த வாவணங் கேநன்றுகாமவெம் போரினுக்கே. |
119. (சந்தக் குழிப்பு.) தனனா தனந்ததன தனனா தனந்ததன தனனா தனந்த தனனா. இரு கைகளிலும் வாட்படைகளை ஏந்தி வீசிப் பாடி ஆடும் ஒரு மதங்கச்சாதி மங்கையை நோக்கி ஓரிளைஞன் காமுற்றுக் கூறும் கூற்று இது. மதங்கர் - இசைக்கும் கூத்துக்கும் உரிய ஒரு சாதியார்.
எறிவேலிரண்டென்றது கண்களை. விசிறா - விசிறி. வெறி - நறுமணம். மின்கொடியனீர் - மின்னற்கொடியை ஒப்பவரே. நூலைப்போன்ற மருங்குல் ஆ: இரக்கக்குறிப்பு. நூபுரம் - சிலம்பு. சொல் முறையீடு - முறையீட்டுச் சொற்களை. (பி-ம்.) ‘சிலை நூபுரம்’.
இரண்டு கண்களுமே என்னுடைய உயிரைக் கவராநிற்ப இரண்டு வாள்களைச் சுழற்றுவது மிகையென்றபடி.
120. நாணத்தால் தன்முகத்தை நோக்காமல் தலைவி புறங் காட்டிய போது தலைவன் கூறியது இது. இது புறங்காட்டல் என்னும் துறை.
பொன்: அம்பிகை. படாம் - முகபடாம், கச்சு. மதயானையென்றது நகில்களை. தேர்ப்பரப்பு: அல்குல். விற்படை: புருவங்கள். வாட்படை: கண்கள். காமவெம்போர் - புணர்ச்சி. புறந்தந்தவா - என்ன வியப்பு? முதுகைக்காட்டியது புறங்காட்டுவது தோற்றோர் செயல்.
போர்க்குரிய கருவிகளாகிய யானை முதலியவற்றையுடைய நீ காமப்போரில் புறங்காட்டியது பொருத்தனம்றென்றபடி.
|