பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்29


வேறு
8.
சுழியுங் கருங்கட் குண்டகழி
   சுவற்றுஞ் சுடர்வேல் கிரிதிரித்த
தோன்றற் களித்துச் சுறவுயர்த்த
   சொக்கப் பெருமாள் செக்கர்முடி
பொழியுந் தரங்கக் கங்கைவிரைப்
   புனல்கால் பாய்ச்சத் தழைந்துவிரி
புவனந் தனிபூத் தருள்பழுத்த
   பொன்னங் கொடியைப் புரக்கவழிந்
திழியுந் துணர்க்கற் பகத்தினற
   விதழ்த்தேன் குடித்துக் குமட்டியெதிர்
எடுக்குஞ் சிறைவண் டுவட்டுறவுண்
   டிரைக்கக் கரைக்கு மதக்கலுழிக்
குழியுஞ் சிறுக ணேற்றுருமுக்
   குரல்வெண் புயலுங் கரும்புயலும்

    8. (அடி, 1) (பி-ம்.) ‘சுழியுண்’. கருங்கட் குண்டகழி - கரிய இடத்தையும் ஆழத்தையுமுடைய கடலாகிய அகழியை. சுவற்றும் - வற்றச் செய்யும். சுடர் வேலை. கிரி - மேருமலை. தோன்றல் - உக்கிர குமார பாண்டின். (பி-ம்.) ‘வேற்கிரி திரித்த’. ‘சொக்கப்பெருமான்’. செக்கர் முடி யென்றார் சடை செந்நிறமுடைமையின்.

    (2) (பி-ம்.) ‘விரைபுனல்’. கால் பாய்ச்ச - காலிலே பாய்ச்ச; வாய்க்காலின் வழியே பாய்ச்சவென்பது வேறொரு பொருள். பொன்னங் கொடி - அங்கயற்கண்ணம்மை. சிவபெருமான் ஊடற்காலத்தில் அம்பிகையை வணங்கும் செயலை நினைந்து இச்செய்தி கூறப்பட்டது. கொடி யென்றதற்கேற்பப் புனல்பாய்ச்சலும், பூத்தலும், பழுத்தலும் சொல்லப்பட்டன. “முழுமணி மிடற்றன் கனன்மழு வீரன் முக்கணான் டகைநின தெழில்கூர் - முகம்புலர் தலைக்கண் டுடல்வளைந் தடியின் முனைப்பிறைக் கோடுகொண் டுழுது,. விழுமணி யரவ நுழைசடாடவியின் விண்ணதித் தண்புனல் விடுப்ப - விரைவொடு குளிர்ந்து முகமலர் தலினான் மென்கொடி யெனநினை யுணர்ந்தேன்” (பெரிய நாயகியம்மை விருத்தம், 1) என்பது இங்கே அறிதற்குரியது.

    (3) துணர் - பூங்கொத்து. நறவு - வாசனை. எதிரெடுக்கும் - கக்கும் உவட்டுகிற - தெவிட்ட. இரைக்க - ஒலிப்ப. கரைக்கும் - கரைந்தோடச் செய்யும்.

    (4) வெண்புயல் - ஐராவதம் கரும்புயல் - கரியமேகம். குலைய - குலையும்படி. குலிசம் - வச்சிராயுதம். புத்தேள் - இங்கே இந்திரன்.