பக்கம் எண் :

சிதம்பரச் செய்யுட்கோவை387

அண்டர்கள் கண்களிப்பத் தொண்ட ரகங்குளிர்ப்ப
நின்றாடு மாடற் குருகா திருத்திரால்
வன்றிண் மறலி புடைத்துக் கொடிறுடைக்கும்
அன்று முருகீர்கொல் லாம்.

    இது பலவிகற்பத்து ஏழடிப் பஃறொடை வெண்பா. இதன் இரண்டாமடி இறுதிச் சீரிரண்டும் இறுதியெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் இணையியைபு. மூன்றாமடி முதற்சீரும் இரண்டாஞ்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் இணையெதுகை. நான்காமடி இறுதிச் சீரொழிந்து ஏனை முச்சீரும் இரண்டாமெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் கூழையெதுகை. அதுவே இரண்டாஞ்சீரும் இறுதிச்சீரும் இறுதியெழுத்து ஒன்றத் தொடுத்தமையால் பொழிப்பியைபு ஐந்தாமடி முதற்சீரும் இறுதிச்சீரும் முரணத் தொடுத்தமையால் ஒரூஉ முரண்.    
(23)

504.
கங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை
செங்குவளை பூத்தாள் செயலென்னே - எங்கோமான்
பங்குற்றுந் தீரா பசப்பு.

    இது மூன்றடியாய் இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று ஒரு விகற்பத்தால் வந்தமையால் ஒருவிகற்ப நேரிசைச் சிந்தயல்வெண்பா.    
(24)


    மேருவை; “எழில்பெறு மிமயத் தியல்புடை யம்பொற், பொலிதரு புலியூர்ப் பொதுவினி னடநவில்” (திருவா. கீர்த்தித்.) அண்டர்கள் - தேவர்கள். மறலி - யமன். புடைத்து - தண்டித்து. கொடிறு உடைக்கும் - கன்னத்தில் அடிக்கும் (278; குறள், 1077)’ அன்றும்: உம்மை உயர்வு சிறப்பு.

    இச்செய்யுள் யமபயத்தை நினைவுறுத்தி நடராசப் பெருமானது தரிசனத்தை வற்புறுத்தியது (520).

    504. கண் மலர் சாத்த - பார்க்க, கருங்குவளை செங்குவளை பூத்தாள் - ஊடலால் விழி சிவந்த உமாதேவியார். கோமானது பங்கில் உற்றும் பசப்புத் தீர்ந்திலது. பசப்பு - பசலை; இது கணவரைப் பிரியும் காலத்தில் மகளிருக்கு உண்டாகும் பொன் நிறம். கண், நெற்றி முதலிய இடங்களிற் பசலை உண்டாதலின், அவ்வகைபற்றித் தீராவெனப் பன்மையாற் கூறினார். உமாதேவியார் சிவபெருமானோடு சேர்ந்திருந்தும் பசலை தீரவில்லையென்ற பொருள் தோற்றி, அத்தேவியாரது ஊடல் மிகுதியைப் புலப்படுத்தியது. பசுமை நிறமென்பது இயல்பான பொருள்.