பக்கம் எண் :

500குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு


ஆசிரிய விருத்தம்
671.
உண்டகில கோடியு முமிழ்ந்திடுவன் 
முகிலேழு மொக்கப் பிழிந்துகடலே 
முடன்வாய் மடுத்திடுவன் வடமேரு 
மூலத் தொடும்பிடுங் கிச்சுழற்றி
அண்டபகி ரண்டமு மடித்துடைப் 
பன்புவன மவையேழு பிலமேழுமாய்
அடைவடை வடுக்கிய வடுக்கைக் 
குலைப்பனிவை யத்தனையும் வித்தையலவால்
கொண்டன்மணி வண்ணனு முண்டகக் 
கண்ணனும் குஞ்சிதச் செஞ்சரணமும்
குடிலகோ டீரமுந் தேடியத 
லமுமண்ட கோளமுந் துருவயோடப்
பண்டைமறை யோலமிட வெளியினட 
மாடும் பரஞ்சுடர் பொலிந்தகாசிப்
பதியிலடை யாமலிப் பல்லுயிர்த் 
தொகுதியும் பரமபத மடைவிப்பனே.    
(73)

   அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
672.
விரைகுழைக்கு மழைமுகில்காள் விண்டலம்தண்
டுழாய்ப்படலை விடலை யென்ன
அரைகுழைக்கும் பொழிற்காசி யணிநகருக்
கேகுதிரே லறன்மென் கூந்தல்
வரைகுழைக்கு முலைகுழைப்பக் குழைதிரடோ
ளழகுமுடி வணங்கி யென்னக்
கரைகுழைக்கு மலைகுழைத்த கண்ணுதற்கென்
பேதைதிறங் கழறு வீரே.    
(74)

    671. சம்பிரதம் - பொய். முண்டகக் கண்ணன் - தாமரைப் பூவிலுள்ள பிரமதேவர். குடிலகோடீரம் - வளைந்த சடை. துருவி - தேடி. மணிவண்ணன் சரணமும் முண்டகக் கண்ணன் கோடீரமும் தேடி; நிரனிறை. பரமபதம் - முத்தி.சம்பிரதத்தைப் பற்றிய செய்திகளை 185-ஆம் செய்யுளாலும் அதன் உரையாலும் உணரலாகும்.

    672. தோழி மேகத்தைத் தூதுவிடுதல்.