44குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

மடலேறப் புகுந்த தலைவன் பனைமடலைக் குதிரையாக்கி வரும் தன் செயலுக்கு மதுரேசர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலை உவமையாக்குகின்றான்     (175).

    சோமசுந்தரக் கடவுள் மண்சுமந்து திருமேனியில் அடிபட்ட காலத்தில் எல்லாவுயிரும் அவ்வடியைப்பெற்றன வென்பதை நினைந்த தலைவி, “அந்தக் காலத்தில் நாமும் அவ்வடிபட்டிருப்போம்; இப்போது நம் உடல் காமநோயால் துன்புறுகின்றதே முன்போல இப்போதும் அவர் திருமேனிக்கு ஏதேனும் தீங்குண்டாயிற்றோ?” (160) என்று கூறுகின்றாள்.

    உலவாக் கோட்டையளித்த திருவிளையாடலை நினைந்து தலைவி கூறுவதாக உள்ள செய்யுட்பகுதி ஒன்று வருமாறு:

“அடுத்தங்குலவாக் கோட்டை................போலுமால்”
(197)
    சந்திரனால் துன்புறும் தலைவி, “கடம்பவனத்தீர், சந்தரனாகிய நெருப்பு மூண்டெழுகின்றது; கன்னிமகளிர் எருவிட்டு அதனை மூட்டுவது போதாமல் தேவரீர் சடையின்மேலுள்ள அத்தீயினுக்கு மேலே விறகை வைத்தும் மூட்டியதை என்னவென்று சொல்வது?” என்று சமற்காரமாகக் கூறுகின்றாள். இறைவன் விறகு சுமந்த திருவிளையாடற் செய்தியையே அவள் இங்ஙனம் குறிக்கின்றாள்.

“ஓரானை முனைப்போருக்.....................டெய்தி டீரே”
(121)
என்னும் தோழிகூற்றில் யானையெய்த திருவிளையாடற்செய்தி வந்துள்ளது.
    பழியஞ்சுஞ் சொக்கரென்பது மதுரேசருக்கு ஒரு திருநாம்ம் பழியஞ்சிய திருவிளையாடலால் உண்டாகியது இது. தலைவியின் நிலையை அப்பெருமான்பால் முறையிடும் செவிலி, “உலகத்தில் நீரே பழியஞ்சியாராதலின் உம்மையன்றி வேறு யாரிடம் இவள் துன்பத்தை உரைப்போம்?” என்றும், “தலைவிக்கு அருள் செய்யாமையால் அவள் உயிர்விட்டாளென்னும் பெண்பழி இப்பழியஞ்சியார்க்கு வந்ததே” (158) என்றும் கூறுகின்றாள். “பழியஞ்சு சொக்கருக்குப் பெண்பழிகொள் பாவமே பாவம்” (133) என்று தோழி இயம்புகின்றாள்.

    தலைவி காமநோயால் உடல்வெம்பிக் கிடக்கையில் தோழியொருத்தி அவள்மேல் திருநீற்றைத் தடவுகின்றாள்; அதுகண்ட தலைவி, “அன்று ஞானசம்பந்தர் கூன்பாண்டியருக்குத் திருநீற்றைத் தடவயதுபோல் என்மேல் நீ தடவுகின்றாயே;