39. | பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங் | | கருள்பொழியுங் கண்மலரீ ராறும் - பருதி | 40. | பலவு மெழுந்துசுடர் பாலித்தாற் போலக் | | குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் | 41. | புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் | | சென்மவிடாய் தீர்க்குந் திருமொழியும் - வின்மலிதோள் | 42. | வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சுர னைத்தடிந்து | | தெவ்வருயிர் சிந்துத் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் | 43. | ஊழ்வினையை மாற்றி யுலவாத பேரின்ப | | வாழ்வுதருஞ் செய்ய மலர்முகமும் - சூழ்வோர் | 44. | வடிக்கும் பழமறைக ளாகமங்கள் யாவும் | | முடிக்குங் கமல முகமும் - விடுத்தகலாப் | 45. | பாச விருடுரந்து பல்கதிரிற் சோதிவிடும் | | வாசமலர்வதன மண்டலமும் - நேசமுடன் | 46. | போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடுக்கும் | | மோக மளிக்கு முகமதியும் - தாகமுடன் |
களை நுதலுக்கு உவமையாக்கிப், பதித்தனைய நுதல், புண்டரம் பூத்த நுதலெனக் கூட்டிப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும்.
40. பல - பன்னிரண்டு.
41. வில் மலி தோள் - விற்படை பொருந்திய தோள். வில்லென்பதற்கு ஒளியென்று பொருள்கொண்டு தொடி முதலியவற்றின் ஒளி நிறைந்த தோளெனினும் ஆம்.
42. இது முதல் திருமுகங்களின் செயல்கள் கூறப்படும்.
போற்று இசைக்கும் - தோத்திரம் செய்யும். தெவ்வர் - பகைவர்.
43. உலவாத - அழியாத.
44. பழமறைகள்: “பாமேவு தெய்வப் பழமறையும்” என்றார் முன்னும்; 1. முடிக்கும் - ஐயமின்றி முற்றுப்பெறச் செய்யும். விடுத்து அகலா - உயிர்களை விட்டு நீங்காத.
45. பல் கதிரின் - பல சூரியர்களைப்போல.
46. புத்தேளிர் பூங்கொடி - தெய்வயானையம்மையார்.
|