பக்கம் எண் :

8குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

47.
வந்தடியிற் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளுந் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
48.
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
49.
தேவர்க் குதவுந் திருக்கரமுஞ் சூர்மகளிர்
மேவக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
50.
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர வணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
51.
வைத்த கரதலமும் வாம்மருங் கிற்கரமும்
உய்த்த குறங்கி லொருகரமும் - மொய்த்த
52.
சிறுதொடிசேர் கையுமணி சேர்ந்ததடங் கையும்
கறுவுசம ரங்குசஞ்சேர் கையும் - தெறுபோர்
53.
அதிர்கே டகஞ்சுழற்று மங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்குங் கரமும் - முதிராத

    42-7. இவற்றிற் கூறப்பட்ட திருமுகங்களின் செயல்கள், “மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுக மொரு முகம், ஆர்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக், காதலி னுவந்து வரங் கொடுத் தன்றே யொருமுகம், மந்திர விதியின் மரபுளி வழாஅ, அந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுகம், எஞ்சிய பொருள்களை யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகம், செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக், கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட்டன்றே யொருமுகம், குறவர், மடமகள் கொடிபோ னுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே” என்னுந் திருமுருகாற்றுப்படையினைத் தழுவிக் கூறப்பட்டன.

    48. வேரி - தேன், விரைக் குரவும் - மணத்தையுடைய குராமலரும், புய சயிலம் - மலைபோன்ற தோள்கள்.
    49. இதுமுதல் திருக்கரங்களின் செயல்கள் கூறப்படும்.

    சூர்மகளிர் - தேமகளிர், மேவ-விரும்ப, ஓவாது-ஒழியாமல்.

    51. வாம மருங்கில் - இடையின் இடப்பக்கத்தில். குறங்கில் - திருத்துடையில்.

    52. தொடி - வீரவளை.

    53. விதிர்க்கும் - அசைக்கும்.

    49-53. இங்கே கூறப்பட்ட திருக்கரங்களின் செயல்கள், “விண்செலன் மரபினையர்க் கேந்திய, தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை, நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசையசைஇய தொருகை, அங்குசங்