முகப்பு தொடக்கம்

அணிந்திடு கலனுஞ் சாந்துமொண் டுகிலு
      மரிவையர் போகமும் பெறுவான்
துணிந்திடு மனமென் றுனைப்பொரு ளாகத்
      துணியுமோ வறிந்திலேன் றமியேன்
பணிந்திடு மயன்மால் பெருமைக ளனைத்தும்
      பறவைகொண் டெழுதலாய் முடிந்து
தணிந்திட நிமிர்ந்து நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(98)