|
அருந்தமிழ்நா டொருகோடி தவஞ்செயவந் ததிர்வெள் ளருவிதூங் குயர்மயிலை வரையினமர் விளக்கைப் பரந்துபடு மிகுபாச ஞானமொடு மற்றைப் பசுஞானங் கடந்தசிவ ஞானியைக்காத் தளிக்க விரிந்தமறை யொருநான்கு மெழுதுகில மெனவோர் வீறுடைப்பொற் கொன்றைபுனை விரிசடையோ னெழுதத் திருந்துதமிழ்க் கோவையொரு நானூறு முரைத்த திருவாத வூரனெனுஞ் செழுமலர்க்கற் பகமே.
|
(9) |
|