முகப்பு
தொடக்கம்
நூல்
அண்ணன்மா புகழ்மூ வரும்புனை யரும்பா
வன்றியென் கவியுநின் றனக்காம்
பண்ணுலா மிருவ ரிசைகொணின் செவியிற்
பாணிமா னொலியுமேற் றிலையோ
விண்ணுலா முடியின் மேருவின் வடபால்
வெயிலொரு புடையுற வொருபால்
தண்ணிலா வெறிப்ப வளர்ந்தெழுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(1)