முகப்பு
தொடக்கம்
தலைவன் றலைவிதன்னையுயர்த்தல்
அலைமக ளன்ன விலங்கிலை வேற்க ணரிவைநல்லாய்
கலைமகள் வந்தனை செய்வெங்கை நாதற்குக் கைகொடுத்து
மலைமக ளண்ட முழுதாளி னுங்கண் மலையரையன்
தலைமக ணன்மைப் பெருமையை யாதென்று சாற்றுவனே.
(86)