முகப்பு
தொடக்கம்
அருங்கவி வாத வூரனே முதலோ
ரன்பிலே மென்றது வேண்டி
இரங்குதல் பொய்ம்மை யன்பிலே னெனயா
னியம்பலே மெய்யெனக் கருளாய்
கருங்கட முமிழு மீர்ங்கவுட் பனைக்கைக்
கரியுரிக் கஞ்சுகங் கடுப்பத்
தரங்கமுண் டெழுகார் முகில்பயில் சோண
சைலனே கைலைநா யகனே.
(6)