முகப்பு தொடக்கம்

 
தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல்
அறிவே யொருவடி வாமீசர் வெங்கையி லன்னமன்னாய்
எறிவே லிறைவர்தம் மூர்க்கேகி யாங்கவ ரெண்ணமெல்லாம்
அறிவே மவரன் பிலாமைகண் டாலுரை யாடலமாய்
மறிவே மறிந்தபி னந்தக னூர்க்கு வழிக்கொள்வமே.
(215)