முகப்பு
தொடக்கம்
தலைவியைப்பாங்கி கொடுஞ்சொற்சொல்லல்
அரியா ரறிதற் கரியார் திருவெங்கை யாயிழையாய்
பிரியார் பிரியப்பட் டாரிலை யோநின் பெருமணக்குக்
கரியார் பொருடரச் சென்றார் பொருட்டுக் கயன்மருட்டும்
வரியார்கண் ணீர்மல்க வென்னைகொ லோநின்று மாழ்குவதே.
(268)