முகப்பு
தொடக்கம்
தலைவன்வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாவல்
அம்மை யிடத்தர் திருவெங்கை வாண ரணிவரையெங்
கொம்மை முலைத்தட மெல்லாம் பசலை கொளக்கொடுத்துச்
செம்மை மனத்திற் பொருள்விழைந் தார்தரச் சென்றவிடத்
தெம்மை நினைத்ததுண் டோவிலை யோசொல் லிறையவனே.
(281)