முகப்பு தொடக்கம்

 
நற்றாய்க்கந்தணர் மொழிதல்
அல்லஞ்சு கண்டர் திருவெங்கை வாண ரணிவரையீர்
இல்லஞ் சுரமச் சுரமேதன் னில்ல மெனக்கருதி
வல்லஞ்சு மென்முலை யாணடந் தாளென் வழிச்செலவைச்
சொல்லந் தணவனைக் கென்றுவெம் பாலைச் சுரத்திடையே.
(364)