முகப்பு
தொடக்கம்
விருந்துகண்டொளித்தவூடலவெளிப்படநோக்கிச் சீறேலென்றவள்சீறடிதொழுதல்
அறத்தா றறியுந் திருவெங்கை வாண ரணிவரைமேல்
வெறுத்தா லுனைமுனி வாற்றுநர் தாஞ்சிலர் வேறுளரோ
ஒறுத்தார் பெறுமின் பமுநினை யாம் வொருவர்பிழை
பொறுத்தார் புகழு மறிந்திலை யேமலர்ப் பூங்கொடியே.
(398)