முகப்பு தொடக்கம்

 
மறம், எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அளியாரு மலர்ப்பொழில்சூழ் வெங்கை யீச
       ரம்மலையி லெம்மூர்மான் பிடிப்போ மென்றுங்
களியாரும் வேடரியா மெம்ம கற்குக்
       கன்னிதனைத் தருகவெனக் கொடுத்த வெம்மை
எளியாரென் றொருதூதா மாது வேண்டி
       யிறைவர்திரு முகமெனமற் றொன்று தந்தாய்
ஒளியாம லுரையவன்யா ரியாங்க ளின்னே
       யுண்மையவன் றிருமுகங்கொண் டெய்து வோமே.
(5)