முகப்பு தொடக்கம்

 
மேற்படி வேறு
அறிவினிலி லங்குதிரு வெங்கைநக ராள
       ரடியினின்மு யங்கியுறு மென்றனக வன்மை
எறியயிலை வென்றவிழி யின்கடையி னாலே
       யிமைவிழுமு னுங்கிமய றந்தமட மாதைப்
பொறியரவ ணைந்துதுயி லுங்கடவுள் கண்டாற்
       பொறியவனு ரந்தனிலி ருந்திடுவ ளோதான்
வெறிமலர்நெ டுஞ்சிலைய னங்கனெதிர் கண்டான்
       மிகுமிரதி கொங்கையவ னம்புயமு றாதே.
(90)