முகப்பு தொடக்கம்

அள்ளிவெண் டிருநீ றுடன்முழு தணியு
      மடியவர்ப் பெறினெழுந் திளங்கன்
றுள்ளிநின் றுருகு மன்னையின் மனநெக்
      குருகுபு சென்றிறைஞ் சிலனே
எள்ளிவெம் புலியெண் கரிதிரு மேனி
      யேறுத றகாதென வெகுண்டு
தள்ளிவந் தருவி யிழிதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(44)