முகப்பு தொடக்கம்

அன்பினுக் கன்றி நான்புனை மலருக்
      கருளுவை யலைமலர்க் கருளின்
முன்பெடுத் தெறிந்த சாக்கியன் கல்லின்
      முருகலர் மிகவுமின் னாதோ
துன்பமுற் றிடுசிற் றின்பவெவ் விடயந்
      துறந்துளோர் மனத்தெழு தருபேர்
இன்பநற் கடலே யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே,
(7)