முகப்பு தொடக்கம்

 
அல்லமதேவர்

வேறு
அகரவுயி ரனையபரி பூரணத் தீர்த்தனை
       யடிநிழலி லடையுமெம தாருயிர்க் காப்பனை
நிகரிலல மயனையழி யாதமெய்க் கூத்தனை
       நிகழுமனு பவனையரு ளாளனைப் போற்றுதும்
நகரவர சிடையமரும் வாசனைக் காற்றெனும்
       நடையிரத மதனன்வலி வீயுமெய்க் காட்டனை
மகரமனை சுவறவெறி வேலுடைச் சூர்ப்பகை
       மயிலைமலை மருவுசிவ ஞானயைக் காக்கவே.
(6)