|
அருவா யுருவா யவையன்றி யறிவாய் நிற்கு மவிர்சடிலத் தண்ணல் பெருஞ்சீ ரிசைப்புலவ ரறைதல் பட்டாங் காதல்போல் மருவார் மலர்த்தண் பொழின்மணிநீர் வாவி பசும்பொன் மதின்மாட மணிமா ளிகைகோ புரநெடுந்தேர் மறுகு முதலா யினவற்றின் பொருவா வளங்க ளிறும்பூது புகல்வார் புகலும் படியெல்லாம் பொருளே யாகி யேனையபோற் புராண மலது மறைகூறுந் திருவார் கச்சி நகரிடங்கொள் செல்வா தாலோ தாலேலோ தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.
|
(2) |
|