|
அருந்து மமுதி னினியதா யன்போ டளைந்து படிறிலதா யறைந்த மொழிதத் துவமசியி னன்றி மாறா வியல்பினதாய்ப் பொருந்து மறையா முடம்பிற்குப் புக்க வுயிராய்ப் பவக்கடற்குப் புணையாய்க் கயிலை வழித்துணையாய்ப் பொலிந்த திருவஞ் செழுத்தென்னும் பரந்த புகழ்மந் திரவேந்து பவனி போதுந் திருமறுகாய்ப் பனிவெண் டிங்கட் சடைமுடியோன் படிவ முணர்த்தும் விளக்காகித் திருந்து பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே திளைக்குங் கருணைச் சிவஞான தேவா முத்தந் தருகவே.
|
(1) |
|