முகப்பு தொடக்கம்

அங்கையின் வைத்த கூர்ங்கனன் மழுவா
      லருவினைக் காடற வெறிந்து
மங்கலில் பத்தி வித்திட வடியேன்
      மனத்தினைத் திருத்துநா ளுளதோ
பொங்குறு செக்கர் கருவிசும் புறவேள்
      புரத்தெரி கதுவிட நோக்கித்
தங்குத லொப்ப நின்றிடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(70)