முகப்பு தொடக்கம்

அகல்வி சும்பெழு பாய பேரிருள் பருகு செங்கதிர் வருகெனா
       னமர ரென்றுயர் தேவர் தானவர் குரவர் தங்களை வருகெனான்
முகம லர்ந்துனை யாட நீயிவண் வருக வென்றன னவன்வரு
       முகிலு றங்குறு வான ளாவிய மயிலை யந்திரு மலையிலே
பகையெ னுங்கதிர் காலு மாமணி யரவ முண்டென வெருவனீ
       பரனொ டொன்றிய நாக மாலிவர் பறவை கண்டுளம் வெருவுமோ
மகிழ்வு கொண்டெமை யாளி யோடுற வருக வம்புலி வருகவே
       மருவ ருஞ்சிவ ஞானி யோடுற வருக வம்புலி வருகவே.
(10)