முகப்பு தொடக்கம்

அழிக்க வுளத்துக் கொண்டனையே லடங்கா தெழும்வெங் கொடுஞ்சினத்தை
       யழிக்க கடலிற் பெருகியெழு மவாவை யழிக்க செருக்குளத்தை
அழிக்க விருளி னுய்த்திடுமோ ரழுக்கா றதனை மூலமற
       வழிக்க காமப் பெரும்பிணியை யழிக்க கொலையை யஞ்சாமை
அழிக்க வினைகண் மூன்றனையு மழிக்க வழியு முடம்பதனை
       யழியா தென்னுங் கருத்ததனை யழிக்க மூல மலவிருளை
அழிக்க புழுதி கொடுசமைத்த வடியேஞ் சிற்றி லழியேலே
       யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
(2)