முகப்பு தொடக்கம்

 
மேற்படி வேறு
அன்றெடுத்து மலைகுழைத்துப் புரமெரித்த புகழல்லா
       லளற்றாழ் வேனை
நின்றெடுத்து மனங்குழைத்து வினையிரித்த நின்புகழை
       நிகழ்த்தல் செய்யார்
குன்றெடுத்த புகழிருப்பச் சிறசிலையொன் றெடுத்தபுகழ்
       கூறல் போன்மான்
கன்றெடுத்த கரமறைத்துச் சிவஞானிப் பெயர்படைத்த
       கருணைக் குன்றே.
(40)