முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
அடங்க வெலும்புந் தோலுமா யருவ ருத்திட் டுமிழ்கின்ற
உடம்பை நானென் றிருந்தேனை யொழிவில் கருணைச் சிவஞானி
கடந்த பிரம நீயெனவே கழற்கா லென்புன் றலைவைத்தான்
முடங்கு சுருள்வா னாய்க்கொருபொன் முடிசூட் டினனெம் பெருமானே.
(84)