முகப்பு
தொடக்கம்
ஆர்த்தெழு திரைகள் சுருண்டெறி கடனஞ்
சமுதுசெய் பெரும்புகழ்த் தனிமை
தீர்த்திட வுளங்கொண் டவலனேன் றனைநின்
றிருவடிக் கண்பனாக் கிலையே
கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவ ரகத்திரு ளனைத்தும்
சாய்த்துநின் றெழுந்து விளங்குறுஞ் சோண
சைலனே கைலைநா யகனே.
(8)