முகப்பு
தொடக்கம்
நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடுபுலம்பல்
ஆவிக் குரியர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
மேவிக் குடையுஞ் சுனையே மலர்கொய்யு மென்பொழிலே
வாவிக் குமுத மலர்வாய் சிறிது மலர்ந்துபெற்ற
பாவிக் குரையுமென் றென்சொல்லிப் போயினள் பாதகியே.
(335)